Sunday, October 28, 2012


Think it over….



தமிழ் மகள்...






Thank God



பள்ளி நாட்கள்...



நினைவலைகளும்... ஏக்கங்களும்...



அழகு ... அழகு.... அழகு...



அழகு என்ற சொல்லுக்கு 
அகராதியில் பொருள் பார்த்தேன்...
பிறகு எனக்குத் தெரிந்த 
எடுத்துக்காட்டுகளைச் சொன்னேன்:....
வானவில்லின் வண்ணங்கள் ஏழும் அழகு;
மனவீசும் பூக்களின் வண்ண அழகு;
இயற்கையின் பசுமை அழகு;
பரந்த கடலின் அலைகள் அழகு;
விரிந்துள்ள வானத்தின் நீலம் அழகு;
மிதக்கின்ற மேகங்களின் பஞ்சுப்பொதி  அழகு;
கொட்டும் நீர் அருவி அழகு 
செதுக்கிய சிற்பங்கள் அழகு.
பாடும் குயில்கள் அழகு;
ஆடும் மயில்கள் அழகு;
மிளிரும் நங்கை அழகு;
தளிர்நடை இடும் குழந்தை அழகு;

அன்னை அவள் சொன்னாள் - முத்தாய் ஒன்று:
"மனிதனுக்கு அழகு  - அவனது நற்குணங்களே "  என்று.

ஏழைத் தாயின் மனசு ..

பாத்திரம் தேச்சு, பசி பழகி..
என் வலி மறைத்து 
படிப்பவனை படிக்கவைக்க 
பலவீட்டு வேலைசெய்தேன்..
பெரிய படிப்புப் படிச்ச 
என்மகன் என்னைப் பார்த்து
கேள்வி கேட்டான்;
"படிக்காத உனக்கு என்னத்தெரியும்னு 
நீ என்னிடம் பேசவந்துட்ட?"

இராப் பகலா பொத்தி வளர்த்த 
எம் மகளும்...
காதல் தாகத்தில் வயசு மோகத்தில்
என்னிடம் கேட்கிறாள் :
"அன்புன்னா என்னவென்று 
உனக்கு எங்கே புரியபோகுது
அன்பகாட்ட உனக்கு உன்  புருஷன் இருக்கானா?"

பூக்களுக்கு என்ன கவலை - மரத்தையே 
தாங்கும் வேர்களைப் பற்றி
கேள்விக்கணைகள் மனதை 
துளைத்தாலும் பெத்த மனசு 
சொல்லுது.."ஆண்டவா அவர்களைக் காப்பாத்து.."