பூ மலர உதவிடும் கதிரவன் போல
இப்புவி மீது வாழும் உயிர்கள்
உயர்ந்திட என்கவிதை பேசும் ...
பட்டினியால் வாடுகின்ற ஏழை
நெஞ்சமது படுகின்ற துயரங்கள்
பறைசாற்றிட என்கவிதை பேசும் ...
உழைக்கின்ற மாந்தர்தம்
எண்ணிலடங்கா வியர்வை துளிகள்
தம்மணத்தை போற்றி என்கவிதை பேசும்
ஏமாற்ற வருகின்ற எத்தர்தம்மை
மக்களிடையே இனம்காட்டி காப்பாற்றிட
எழுத்தாலே எம்கவிதை கூறு போடும்
இளங்காலை சூர்யனை போல
இதமான வெளிச்சத்தை உலகுக்குத்
தந்திடவே என்கவிதை இனி பேசும்
தாகம் தனை தணிக்க பெய்திடும்
தன்னகிரில்லா மழையை போல
கனிவான கருத்தினையே என்கவிதை பேசும்
ஒப்பற்ற வாழ்விற்கு உறுதுணையை
உன்னோடு வந்திடவே என்கவிதை நாடும்.