Sunday, October 28, 2012


ஏழைத் தாயின் மனசு ..

பாத்திரம் தேச்சு, பசி பழகி..
என் வலி மறைத்து 
படிப்பவனை படிக்கவைக்க 
பலவீட்டு வேலைசெய்தேன்..
பெரிய படிப்புப் படிச்ச 
என்மகன் என்னைப் பார்த்து
கேள்வி கேட்டான்;
"படிக்காத உனக்கு என்னத்தெரியும்னு 
நீ என்னிடம் பேசவந்துட்ட?"

இராப் பகலா பொத்தி வளர்த்த 
எம் மகளும்...
காதல் தாகத்தில் வயசு மோகத்தில்
என்னிடம் கேட்கிறாள் :
"அன்புன்னா என்னவென்று 
உனக்கு எங்கே புரியபோகுது
அன்பகாட்ட உனக்கு உன்  புருஷன் இருக்கானா?"

பூக்களுக்கு என்ன கவலை - மரத்தையே 
தாங்கும் வேர்களைப் பற்றி
கேள்விக்கணைகள் மனதை 
துளைத்தாலும் பெத்த மனசு 
சொல்லுது.."ஆண்டவா அவர்களைக் காப்பாத்து.."

No comments:

Post a Comment